திருச்செந்தூர் அருகே காயாமொழி முப்புராதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கியது. 3ம் நாள் விழாவான நேற்று யாகசாலை பூஜை, காலை 10:30 மணிக்கு கும்பாபிஷேகம், இரவு 7 மணிக்கு படைப்பு பூஜை நடைபெற்றது. 4ம் நாள் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு பக்தர்களின் நேமிச கைங்கர்யங்கள், மாலை 4 மணி முதல் 5 மணி வரை நாதஸ்வர கச்சேரி மற்றும் திருமங்கலம் பரமேஸ்வரி குழுவினரின் கும்பம், கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 8 மணி முதல் 12 மணி வரையும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு மணிக்கு 11 மணிக்கு கணியான் கூத்து நடக்கிறது. நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பெண்கள் அம்மனுக்கு முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.
வரும் வெள்ளிக்கிழமை நண்பர்கள் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மகேஸ்வர பூஜை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இன்று நடைபெற்ற அளவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தினம் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் செய்துள்ளனர்.