October 23, 2024
திருச்செந்தூர் அருகே காயாமொழி முப்புராதி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா

திருச்செந்தூர் அருகே காயாமொழி முப்புராதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கியது. 3ம் நாள் விழாவான நேற்று யாகசாலை பூஜை, காலை 10:30 மணிக்கு கும்பாபிஷேகம், இரவு 7 மணிக்கு படைப்பு பூஜை நடைபெற்றது. 4ம் நாள் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு பக்தர்களின் நேமிச கைங்கர்யங்கள், மாலை 4 மணி முதல் 5 மணி வரை நாதஸ்வர கச்சேரி மற்றும் திருமங்கலம் பரமேஸ்வரி குழுவினரின் கும்பம், கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு 8 மணி முதல் 12 மணி வரையும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு மணிக்கு 11 மணிக்கு கணியான் கூத்து நடக்கிறது. நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பெண்கள் அம்மனுக்கு முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.

வரும் வெள்ளிக்கிழமை நண்பர்கள் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மகேஸ்வர பூஜை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இன்று நடைபெற்ற அளவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தினம் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress