2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ஆயிரம் பேருக்கு அன்னதானம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி.யின் 62 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் நினைவு கல்வி அறக்கட்டளை சார்பில் திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனையில் இன்று பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
மேலும் குழந்தைகளின் தாய்களுக்கு பிரட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து திருச்செந்தூர் குறிஞ்சி கல்யாண மஹாலில் நடைபெற்ற விழாவில் முதியோர் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு விசிக மண்டல செயலாளரும், அம்பேத்கர் நினைவு கல்வி அறக்கட்டளை தலைவருமான முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார்.
மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி ,தமிழ்ப் பரிதி,நந்தன், ஜான் வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் கலை வேந்தன், தேவேந்திரகுல வேளாளர் மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் எஸ் ஆர் பாண்டியன், விசிக தேர்தல் பரப்புரை குழு உறுப்பினர் அகமது சாஹிபு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கேக் வெட்டி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் திருச்செந்தூர் அரசு மருத்துவர் சுமதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் நினைவு கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பல்சுவை நிகழ்ச்சியாக மாறிய எழுச்சித் தமிழர் பிறந்தநாள் விழா..!
போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாவியருக்கு பரிசுகள்..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் திருமா அவர்களின் 62-வது அகவை தினத்தை ஒட்டி, ஆகஸ்ட் 18 தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு விசிக – நகரச் செயலாளர் தோழர் வெள்ளைத்துரை அவர்கள் தலைமை தாங்கினார். விசிக மேனாள் மண்டலச் செயலாளர் தோழர் தமிழினியன், கருத்தியல் பரப்புரை மாநிலச் செயலாளர் தோழர் தமிழ்க்குட்டி, ஒன்றியச் செயலாளர் தோழர் சங்கத் தமிழன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கட்சியின் ஒன்றிய, நகர, முகாம் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நான் சிறப்புரையாற்றி வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி மகிழ்வுற்றேன்.