கொம்மடிக்கோட்டை ஶ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம் இணைந்து 25.09.2024 அன்று கல்லூரி மாணவர்களிடயே “வாசிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி” பட்டறை நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நூலகக் குழு ஒருங்கிணைப் பாளரும் வணிகவியல் துறை பேராசிரியருமான டாக்டர் அ மரிய பாரதி வரவேற்புரை வழங்கி னார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் செள அருள்ராஜ் பொன்னுதுரை அவர்கள் வாசிப்பு திறன் பற்றி முன்னுரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் சு மகேஷ் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் . ஆங்கிலத் துறை பேராசிரியை செ. இன்பென்ட் ஜோசி சுதா சிறப்பு விருந்தினரைப் பற்றி அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கத் தலைவர் கோ சந்திர சேகர், செயலாளர் சு மாதவன், பொருளாளர் க ஜெகநாத பெருமாள், ஆலோசகர் ஆ முத்து கிருஷ்ணன் மற்றும் மு.சுப்பிரமணியன் அரசு பொது நூலகம், பொத்தக்காலன் விளை, சு சிவ நனைந்த பெருமாள், நூலகர் கொம்மடிக்கோட்டை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கத்தின் சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் தினமணி பத்திரிக்கை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் பத்திரிக்கையுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி நடத்தப்பட்டது. அதில் சிறந்த வாசிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு 5 மாணவர்களுக்கு வாசிப்பு இயக்கத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் வாசிப்பு இயக்கத்தின் சார்பாக நூலகக் குழு ஒருங்கிணைப்பாளரும் வணிகவியல் துறை பேராசிரியருமான டாக்டர் அ.மரிய பாரதி அவர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் பா தமயந்தி நன்றியுரை வழங்கினார்.