October 23, 2024
பேரிடர் அபாயத்தைக் குறைத்து நெகிழ்வான  சமூகங்களை உருவாக்க வேண்டும்

உலக சுற்றுச்சூழல் ஆரோக்கியதினம் என்பது நம்மைச் சுற்றியுள்ள சூழல், நாம் வாழும் இடம், நாம் உண்ணும் உணவு, நாம் வாழும் சுற்றுப்புறம் மற்றும் நாம் சுவாசிக்கும் காற்று ஆகிய காரணிகள் மூலம் நம் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றன.

நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான சூழலில் வாழ்வது மிகவும் முக்கியம். சுற்றுச்சூழல் ஆரோக்கியம் என்பது பொது மருத்துவத்தின் ஒரு பிரிவாகும்.

இது மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே உள்ள உறவில் கவனம் செலுத்துகிறது. இது ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகங்களை வளர்க்க உதவுகிறது. இது மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலை செழிக்க உதவுகிறது. இது மனித ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும்; அவற்றின் நல்வாழ்வையும் மேம்படுத்த உதவுகிறது.

மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான மோதலை ஆராய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ’’உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினம்’’ கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு நாளை இன்று(செப்.27) கொண்டாட நாம் தயாராகி வரும் நிலையில், மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறது இந்தக் கட்டுரை.

ஒவ்வொரு ஆண்டும், உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினம் செப்டம்பர் 26ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினம் இன்றைய தேதியில் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச சுற்றுச்சூழல் சுகாதார கூட்டமைப்பு (IFEH) கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக மனிதர்களைக் கொல்ல அச்சுறுத்தும் மற்றும் அவர்களின் துன்பங்களுக்குக் காரணமான ஆரோக்கியப் பிரச்னைகளை மேம்படுத்த பணியாற்றி வருகிறது. 2011 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுச்சூழல் மருத்துவ கூட்டமைப்பு உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினத்தை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26ஆம் தேதியன்று கொண்டாடுவதாக அறிவித்தது. சுற்றுச்சூழல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த நாள் மக்களுக்கு கவனம் செலுத்துகிறது.

உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினத்தின் முக்கியத்துவம்
2024ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினத்தின் கருப்பொருள் “சுற்றுச்சூழல் ஆரோக்கியம்: பேரிடர் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் அதைத் தழுவி நெகிழ்வான சமூகங்களை உருவாக்குதல்” ஆகிய கொள்கைகளைக் கொண்டிருக்கிறது.

மேலும், சுற்றுச்சூழல் ஆரோக்கியம் என்பது பொது சுகாதாரத்தில் உள்ள மிகப்பெரிய துறைகளில் ஒன்றாகும். ஏனெனில் வெளிப்புற சக்திகள் மக்கள் எவ்வாறு சாப்பிடுகிறார்கள், வாழ்கிறார்கள், வளர்கிறார்கள் என்பதை எண்ணற்ற வழிகளில் பாதிக்கலாம். இந்த சக்திகள் (நாம் குடிக்கும் நீர் மற்றும் ஆரோக்கியம்) நமது இயற்கை சூழலை சரிசெய்வது பற்றியதாக இருக்கலாம். ஆனால், அவை மனிதர்களின் செயல்களினால் நடப்பவை என்று சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கான சர்வதேச கூட்டமைப்பு அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எழுதியுள்ளது.

இந்த நாளில், சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான முறைகளை ஆராயவும் பல்வேறு நிறுவனங்கள் ஒன்றிணைகின்றன.

இந்த கருப்பொருள் சுற்றுச்சூழல் ஆரோக்கியம், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பில் கவனம் செலுத்துகிறது. காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் சுகாதார அபாயங்களை நிவர்த்தி செய்வதன் மூலம் சமூகங்களை கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுக்கிறது.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress