சென்னை: இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராமில் விவாகரத்து கடினமானது’’ எனக்கூறி வெளியிட்ட நீண்ட பதிவு என்பது அவர் தனது கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை பிரிய உள்ளாரா? என்ற பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது. இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர். இவர் 2003-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை இந்தியா சார்பில் டென்னிஸ் விளையாட்டின் அடையாளமாக இருந்தார்.
இந்தியாவில் இருந்து ஆண்கள் மட்டுமே டென்னிஸ் விளையாடி வந்த நிலையில் சானியா மிர்சா அந்த விளையாட்டில் நுழைந்து சாதித்து காட்டினார். சானியா மிர்சா டென்னிஸ் விளையாட அவர் பிறந்த சமூகமே தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை மீறி சாதித்து காட்டினார்.
2009 ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவு, 2012 பிரெஞ்சு ஓபன், 2014 அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றார். மேலும் 2015ல் விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு, 2015 அமெரிக்க ஓபன், 2016 ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றினார். இதுதவிர மேலும் பல போட்டிகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கிடையே தான் கடந்த ஆண்டு சானியா மிர்சா ஓய்வை அறிவித்தார். முன்னதாக சானியா மிர்சா கடந்த 2010ம் ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சனை இருக்கும் நிலையில் அவரது திருமணமும் விவாதத்தை கிளப்பியது. ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. மேலும் பாகிஸ்தானின் சோயிப் அக்தரை அவர் கரம் பிடித்து இருந்தாலும் கூட இந்தியாவுக்காக தொடர்ந்து டென்னிஸ் அரங்கில் விளையாடி வந்தார்.