October 23, 2024
தாறுமாறாக உயரும் தக்காளி விலை

பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை!

தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும் பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ 61 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர் மழை காரணமாக அண்டை மாநிலங்களிலிருந்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்யப்படும் தக்காளியின் விலை கிலோ 90 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், கொள்முதல் செய்யும் விலையிலேயே மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பண்ணை பசுமைக் கடைகளில் 61 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress